BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் 29 ஆண்கள் தற்கொலையா? உண்மையை தேடும் பிபிசி கள ஆய்வு
காவல்துறையின் தகவல்படி, 29 ஆண்களின் தற்கொலைகளில் திருமணம் குறித்த பிரச்னைகள் ஒரு காரணியாக இருந்தது. இந்த எண்ணிக்கை வெளிவந்த பிறகு, ஜல்கானில் தொடர்ந்து ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, "இந்த நாட்களில் ஆண்களுக்கு மணமகள்கள் கிடைப்பதில்லை" என்பதே அது. உண்மை என்ன?
குஜராத்: இந்த கும்பல் புழக்கத்தில் விட்ட போலி ரத்த அழுத்த மாத்திரைகள் எவ்வளவு ஆபத்தானவை? போலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் போலி மருந்துகளைத் தயாரித்தல், வாங்குதல் மற்றும் மாநிலங்களுக்கு இடையே விநியோகம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்ட மூன்று பேரை குஜராத் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகத்துடன் (FDCA) இணைந்து அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இத்தகைய போலி மருந்துகளை கண்டுபிடிப்பது எப்படி?
நேபாள வெள்ளம்: 9 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய இந்தியர் உள்பட 1,000 தொழிலாளர்களின் கதி என்ன?
சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கிறது?
'கடத்தி உயிரோடு எரிக்கப்பட்டார்' - யார் இந்த பெண் இன்ஃப்ளூயன்சர்?
"சண்டிகரில் உள்ள செக்டர் 34-ல் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்திக்க மன்ஜீத் சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அங்கு, இரண்டு நபர்கள் அவரைத் தாக்கி, பின்னர் ஒரு காரில் மொரிண்டாவிற்கு கடத்திச் சென்று இந்தக் குற்றத்தைச் செய்துள்ளனர்."
'3,000 ஆண்டு பழமையான இரு குரல்கள் மீண்டும் கேட்டன': ஒரு நூற்றாண்டு கடந்தும் துட்டன்காமன் கல்லறை பற்றி விலகாத மர்மங்கள்
கடந்த 1936ஆம் ஆண்டு பிபிசி ஆவணக் காணொளி ஒன்றில், தொல்லியல் ஆய்வாளர் ஹோவர்ட் கார்டர், 1924 பிப்ரவரி 12ஆம் தேதி தானும் தனது குழுவினரும் 3,300 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் எகிப்திய மன்னரை முதன்முறையாகச் சந்தித்த தருணத்தை விவரிக்கிறார்.
பகலில் எத்தனை நிமிட குட்டித்தூக்கம் நல்லது? நீங்கள் அறிய வேண்டிய 6 முக்கிய விஷயங்கள்
மனித உடலில் ஆற்றலை 'ரீஸ்டார்ட்' செய்வதற்கான பொத்தான் எதுவும் இல்லை. இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கும் குட்டித் தூக்கம், தூக்கக் கலக்கத்தைக் குறைத்து சில வகையான உளவியல் செயல்திறன்களை மேம்படுத்துவதுடன் தற்காலிகப் புத்துணர்வை அளிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நேபாள வெள்ளம்: சுற்றியிருந்த வீடுகள் இடிந்தாலும், உறுதியாக நின்ற வீட்டிற்கும், பால்கனியில் நின்றவர்களுக்கும் என்ன ஆனது?
புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளதாக நேபாளக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் காணாமல் போன ஆஸ்திரேலியத் தமிழ்க் குடும்பம் - தகவலுக்காக காத்திருக்கும் உறவினர்கள்
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில், சுற்றுலாவுக்காக அந்நாட்டுக்குச் சென்ற, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று தொடர்பற்றுப் போயுள்ளது
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
வெளிநாட்டு உதவியை நிராகரித்த நேபாளம் ஒரே நாளில் முடிவை மாற்றியது ஏன்?
கடுமையான வெள்ளத்துக்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவியை நேபாளம் முதலில் நிராகரித்திருந்தது. எனினும், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளது. வெளிநாட்டு உதவியை நிராகரித்த நேபாளம் ஒரே நாளில் முடிவை மாற்றியது ஏன்?
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
இந்த இரு பெண்களும் நேபாள எல்லை கடந்து சீனாவுக்குள் நுழைந்தார்களா? விடை தேடும் சொந்தங்கள்
"சீன அரசிடம் இருந்து எனக்கு ஒரு பட்டியல் வேண்டும். காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் என அனைவரின் விவரங்களும் எனக்குத் தேவை. எங்களுக்கு சமீபத்திய தகவல்கள் தேவை. நாங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்து வருகிறோம். எங்கள் நேரம் முழுவதையும் தொலைபேசியிலேயே செலவிடுகிறோம்"
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
'முன்னால் சென்ற பேருந்தை 40 அடி உயரம் எழுந்த சகதி மூடியது' - நேபாளத்தில் உயிர் தப்பிய தமிழர் நேரில் கண்டது என்ன?
நேபாளம் வெள்ள பாதிப்பில் சிக்கிய தமிழர்கள் சிலர் மீட்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.வெள்ளபாதிப்பை நேரில் பார்த்தது குறித்து பிபிசி தமிழிடம் விளக்கினர்.
கைலாஷ் மானசரோவர் எங்கு உள்ளது? மக்கள் அங்கு செல்வது ஏன்?
இயற்கைப் பேரிடர்கள் நிறைந்த பகுதியாக இருப்பினும், இந்துக்கள் அதிகமாக ஆன்மீக சுற்றுலா செல்லும் இடமாக நேபாளம் இருப்பது ஏன்? அங்கு செல்வது எப்படி, கவனம் ஈர்க்கும் பகுதிகள் யாவை?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
'காஞ்சனா' படம் பார்த்த பாதிப்பா? மாணவிகளின் விசித்திர நடவடிக்கையால் காலியான பள்ளி - பிபிசி கள ஆய்வு
மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான மெல்காட் பகுதியில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரமப் பள்ளி, பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய வதந்திகளால் முற்றிலும் அமைதியாகியுள்ளது. என்ன நடந்தது?
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
எவரெஸ்டில் 30 ஆண்டாக உள்ள இந்தியர் உடலை கீழே கொண்டு வருவது ஏன் சவாலானது? குடும்பம் கூறுவது என்ன?
‘கிரீன் பூட்ஸ்’ என அழைக்கப்படும் ஒரு சடலம், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பனிப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகக் கிடக்கிறது. இப்போது, அவரது உடலை மீட்பதற்கான குழுவை இந்தியா தேடி வருகிறது.
முகப்பரு யாருக்கெல்லாம் வரும்? முகப்பருவை குறைக்க செய்ய வேண்டிய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள்
முகப்பருவ எப்படி உருவாகிறது, அது குறித்த உண்மைகளும் பொய்யான நம்பிக்கைகளும் என்னவென்று விளக்குகிறது இந்தக் கட்டுரை.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































